புதன், 12 மார்ச், 2014

3.கீறல் முடி நோய்

கீறல் முடி நோய்யின் தன்மை :

உடலின் சூட்டை தணிக்கக் தலைக்குளிப்பது வழக்கம்.குளித்த பின்பு ,தலை மயிரைக் கோதித் துவரத்துவது பெண்களுக்கு வழக்கம்.வேகமாய்க் கோதி உலர்த்தும் போது,முடியானது பிளவு பட்டு போகிறது.முடியில் வெய்யில் பட,முடியும்.பரபரப்பாய்,பொடியாக நொறுங்கி போகும்.முடியின் நுனி கீறல் ஏற்படும் போது யாதொரு நோவும் தோன்றாது.


முடி கீறலுக்கு எண்ணெய் : 

1.முற்றிய தேங்காயை துருவி பால் எடுத்து,அதைக் காய்ச்சிய உருக்கு நெய்யும்,1/2 படி 
2.ஆமணக்கு எண்ணெய்,1/2 படி
3.பசும்பால்,1/2 படி
4.பசுவின் நெய் 1/2 படி
5.பொன்னாகண்ணி சாறு 2 படி,
6.அதிமதுரம் 1/2 பலம் 
7.செஞ்சந்தனம்  1/2 பலம் 
8.தேவதாரம்  1/2 பலம் 
9.கருஞ் சீரகம்  1/2 பலம் 
10.ஏலம்  1/2 பலம் ,

6 முதல் 10 சரக்குகளை தனித்  தனியே பொடித்து,சேர்த்து பசும்பால் விட்டு மை போல் அரைத்து,நெய்கள் ,சாறுகளையும் ஒன்றாக்கி எண்ணையுடன் கலந்து அடுப்பெற்றி சிறு தீயாக எரித்து,காய்ச்சவும்,கலவையில் நுரை தோன்றிப் பின்பு மறையும் அப்போது கீழ் இறக்கி கற்கத்தை வடிகட்டி எண்ணெய் ஆறவிட்டு  புட்டியில் அடைத்து தானியத்துள் வைத்து மூடி 8 நாட்கள் பத்திர படுத்தவும்.

உபயோகிக்கும் முறை :

இந்த எண்ணையை தலையிலிட்டு தேய்த்து வாரம் 2 நாட்கள்,(ஆண்கள்=புதன்,சனி,பெண்கள் =செவ்வாய்,வெள்ளி )ஊறவிட்டு வெந்நீரில் குளித்து வந்தால் கீறல் முடி நோய்   நீங்கும்.மறுபடியும் ரோமம் செழுமையாக வளர தொடங்கும்.



தைல மருந்து வேண்டினால் தொடர்புக்கு :

+91 9894618455.
 மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக